அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தை நீக்க ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.
இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மாற்றம் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தது.
இதையடுத்து, உயர்நீதிமன்றம், அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மாற்றம் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தது.
இதையடுத்து, உயர்நீதிமன்றம், அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.