மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் முற்றுகை போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மாணவி அனிதாவை தற்கொலை தூண்டிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவை மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாபெரும் இரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி பெறாததால் மனம் உடைந்து  தற்போது தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவை இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் கோவை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக இன்று மாலை நடைபெற்றது. 



இது குறித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் கோவை மாநில செயலாளர் அஷ்ரப் அலி கூறுகையில்; நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் இன்னும் போராடி வரும் இந்நிலையில், மாணவி அனிதாவின் தற்கொலை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மருத்துவக் கனவு கொண்டிருக்கும் வேளையில் இன்று அவர்களின் கனவை மத்திய, மாநில அரசு தகர்த்துள்ளது. இதன் மூலமாக மாணவர் ஜனநாயகத்தை படுகொலை செய்து வருகிறது இந்த அரசாங்கம். இதற்கு காரணமான அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும். இதற்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் போராட்டம் இதோடு முடியப் போவதில்லை நீட் தேர்வு குழிதோண்டி புதைக்கும் வரை மாணவர்களின் புரட்சி ஓங்கும் என்றார்.



கோவையில் கொட்டும் மழையில் இரவு நேரத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கோவை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...