மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் முற்றுகை போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மாணவி அனிதாவை தற்கொலை தூண்டிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவை மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாபெரும் இரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி பெறாததால் மனம் உடைந்து  தற்போது தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவை இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் கோவை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக இன்று மாலை நடைபெற்றது. 



இது குறித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் கோவை மாநில செயலாளர் அஷ்ரப் அலி கூறுகையில்; நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் இன்னும் போராடி வரும் இந்நிலையில், மாணவி அனிதாவின் தற்கொலை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மருத்துவக் கனவு கொண்டிருக்கும் வேளையில் இன்று அவர்களின் கனவை மத்திய, மாநில அரசு தகர்த்துள்ளது. இதன் மூலமாக மாணவர் ஜனநாயகத்தை படுகொலை செய்து வருகிறது இந்த அரசாங்கம். இதற்கு காரணமான அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும். இதற்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் போராட்டம் இதோடு முடியப் போவதில்லை நீட் தேர்வு குழிதோண்டி புதைக்கும் வரை மாணவர்களின் புரட்சி ஓங்கும் என்றார்.



கோவையில் கொட்டும் மழையில் இரவு நேரத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கோவை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...