மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் முற்றுகை போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மாணவி அனிதாவை தற்கொலை தூண்டிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவை மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாபெரும் இரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி பெறாததால் மனம் உடைந்து  தற்போது தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவை இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் கோவை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக இன்று மாலை நடைபெற்றது. 



இது குறித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் கோவை மாநில செயலாளர் அஷ்ரப் அலி கூறுகையில்; நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் இன்னும் போராடி வரும் இந்நிலையில், மாணவி அனிதாவின் தற்கொலை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மருத்துவக் கனவு கொண்டிருக்கும் வேளையில் இன்று அவர்களின் கனவை மத்திய, மாநில அரசு தகர்த்துள்ளது. இதன் மூலமாக மாணவர் ஜனநாயகத்தை படுகொலை செய்து வருகிறது இந்த அரசாங்கம். இதற்கு காரணமான அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும். இதற்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் போராட்டம் இதோடு முடியப் போவதில்லை நீட் தேர்வு குழிதோண்டி புதைக்கும் வரை மாணவர்களின் புரட்சி ஓங்கும் என்றார்.



கோவையில் கொட்டும் மழையில் இரவு நேரத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கோவை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...