தேசம் முழுவதும் விழிப்புணர்வு உருவாக்கிய நதிகளை மீட்போம் இயக்கம்

அழிந்து வரும் நம் தேசத்து நதிகள் மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய நதிகளை மீட்போம் என்னும் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் உருவாகி வருகிறது. பல நூற்றாண்டுகளாக வற்றாத ஜீவ நதிகளாக ஓடி நம் மண்ணையும், நம்வாழ்வையும் கலாச்சாரத்தையும் வளப்படுத்திய நம் நதிகள் கடந்த சில வருடங்களில் கவலைக்குரிய விதத்தில் வற்றி வருகின்றன. நம் நதிகளை மீட்கும் முக்கிய தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.



நதிகளை பாதுகாக்கும் இந்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக இன்று (செப்டம்பர் 1) நாடெங்கும் லட்சக்கண்கானோர் தங்கள் ஊரின் முக்கிய வீதிகளில் நீல நிற உடை அணிந்து, நதிகளை மீட்போம் என்ற அட்டைகளை ஏந்தியும் சிலர் நதிகளை மீட்போம் என்ற தலைக்கவசம் போன்ற அட்டைகளை தலையில் அணிந்தும் நின்றனர்.



தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் சாலை ஓரங்களில் 50 அடி இடைவெளியுடன் அமைதியாக பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் நின்றனர். மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், கார்பொரேட் நிறுவன பணியாளர்கள், திரை உலக பிரமுகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.

சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, உற்சாகமாக மழையில் நனைந்தபடி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நதிகளை மீட்க உறுதியாக நின்றனர்.



இந்நிகழ்ச்சி இனம், மதம், சமயம், சாதி கடந்து அனைத்து மக்களிடையேயும் பலத்த வரவேற்பை பெற்றது. பொது மக்கள் பலரும் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றதுடன் 80009 80009 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்திய தொழில் துறை கழகம் (சிஐஐ), இந்திய துணை ராணுவம் (சிஆர்பிஎஃப்), எல்லை பாதுகாப்பு படையினர் (பிஎஸ்எஃப்), இந்திய இரயில்வே உட்பட பல அமைப்புகளும், கட்சி பேதம், மதபேதமில்லாமல் பல தலைவர்களும் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிகின்றனர். அரசாங்க அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் கடந்த ஒரு மாதமாக இவ்வியக்கத்திற்க்கு ஆதரவு அளித்த வன்னம் உள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...