தேசம் முழுவதும் விழிப்புணர்வு உருவாக்கிய நதிகளை மீட்போம் இயக்கம்

அழிந்து வரும் நம் தேசத்து நதிகள் மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய நதிகளை மீட்போம் என்னும் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் உருவாகி வருகிறது. பல நூற்றாண்டுகளாக வற்றாத ஜீவ நதிகளாக ஓடி நம் மண்ணையும், நம்வாழ்வையும் கலாச்சாரத்தையும் வளப்படுத்திய நம் நதிகள் கடந்த சில வருடங்களில் கவலைக்குரிய விதத்தில் வற்றி வருகின்றன. நம் நதிகளை மீட்கும் முக்கிய தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.



நதிகளை பாதுகாக்கும் இந்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக இன்று (செப்டம்பர் 1) நாடெங்கும் லட்சக்கண்கானோர் தங்கள் ஊரின் முக்கிய வீதிகளில் நீல நிற உடை அணிந்து, நதிகளை மீட்போம் என்ற அட்டைகளை ஏந்தியும் சிலர் நதிகளை மீட்போம் என்ற தலைக்கவசம் போன்ற அட்டைகளை தலையில் அணிந்தும் நின்றனர்.



தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் சாலை ஓரங்களில் 50 அடி இடைவெளியுடன் அமைதியாக பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் நின்றனர். மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், கார்பொரேட் நிறுவன பணியாளர்கள், திரை உலக பிரமுகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.

சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, உற்சாகமாக மழையில் நனைந்தபடி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நதிகளை மீட்க உறுதியாக நின்றனர்.



இந்நிகழ்ச்சி இனம், மதம், சமயம், சாதி கடந்து அனைத்து மக்களிடையேயும் பலத்த வரவேற்பை பெற்றது. பொது மக்கள் பலரும் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றதுடன் 80009 80009 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்திய தொழில் துறை கழகம் (சிஐஐ), இந்திய துணை ராணுவம் (சிஆர்பிஎஃப்), எல்லை பாதுகாப்பு படையினர் (பிஎஸ்எஃப்), இந்திய இரயில்வே உட்பட பல அமைப்புகளும், கட்சி பேதம், மதபேதமில்லாமல் பல தலைவர்களும் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிகின்றனர். அரசாங்க அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் கடந்த ஒரு மாதமாக இவ்வியக்கத்திற்க்கு ஆதரவு அளித்த வன்னம் உள்ளனர்.

Newsletter

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...