அசல் ஓட்டுனர் உரிமத்தை உரிமையாளர்களிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்- காவல்துறை ஆணையரிடம் டாக்சி ஓட்டுனர்கள் மனு

வாகனம் ஓட்டும் போது ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருப்பது அவசியம் என்றும், செப்டம்பர் 1 முதல் கட்டாயமாக ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றும் சமீபத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் துறையினர் ஒரிஜினர் லைசன்ஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர். 

இந்த நிலையில், அனைத்து வாகன ஓட்டிகளும் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஒரிஜினல் லைசன் வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகள் விதிக்கடும் என்னும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று வாடகை கார் ஓட்டும் ஓட்டுநர்கள் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



வாடகை கார்களை இயக்கும் ஓட்டுனர்கள், அவர்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை வண்டியின் உரிமையாளரிடம் கொடுக்க வேண்டியுள்ளது.

வாகனத்தை ஓட்டுனர்களை நம்பி ஒப்படைப்பதற்கு சாட்சியாக எண்ணி உரிமையாளர்கள் அசல் ஓட்டுனர் உரிமங்களை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அரசின் புதிய அறிவிப்பால் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, வாகன உரிமையாளர்கள் வாங்கி வைத்துள்ள அசல் ஓட்டுனர் உரிமத்தை, மீண்டும் ஓட்டுனர்களிடமே ஒப்படைக்க ஆணையிட வேண்டும்.

இவ்வறு, கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் வாடகை கார் ஓட்டுனர்கள் மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...