வாகனம் ஓட்டும் போது ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருப்பது அவசியம் என்றும், செப்டம்பர் 1 முதல் கட்டாயமாக ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றும் சமீபத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் துறையினர் ஒரிஜினர் லைசன்ஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில், அனைத்து வாகன ஓட்டிகளும் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஒரிஜினல் லைசன் வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகள் விதிக்கடும் என்னும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று வாடகை கார் ஓட்டும் ஓட்டுநர்கள் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

வாடகை கார்களை இயக்கும் ஓட்டுனர்கள், அவர்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை வண்டியின் உரிமையாளரிடம் கொடுக்க வேண்டியுள்ளது.
வாகனத்தை ஓட்டுனர்களை நம்பி ஒப்படைப்பதற்கு சாட்சியாக எண்ணி உரிமையாளர்கள் அசல் ஓட்டுனர் உரிமங்களை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், அரசின் புதிய அறிவிப்பால் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, வாகன உரிமையாளர்கள் வாங்கி வைத்துள்ள அசல் ஓட்டுனர் உரிமத்தை, மீண்டும் ஓட்டுனர்களிடமே ஒப்படைக்க ஆணையிட வேண்டும்.
இவ்வறு, கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் வாடகை கார் ஓட்டுனர்கள் மனு அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் துறையினர் ஒரிஜினர் லைசன்ஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில், அனைத்து வாகன ஓட்டிகளும் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஒரிஜினல் லைசன் வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகள் விதிக்கடும் என்னும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று வாடகை கார் ஓட்டும் ஓட்டுநர்கள் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

வாடகை கார்களை இயக்கும் ஓட்டுனர்கள், அவர்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை வண்டியின் உரிமையாளரிடம் கொடுக்க வேண்டியுள்ளது.
வாகனத்தை ஓட்டுனர்களை நம்பி ஒப்படைப்பதற்கு சாட்சியாக எண்ணி உரிமையாளர்கள் அசல் ஓட்டுனர் உரிமங்களை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், அரசின் புதிய அறிவிப்பால் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, வாகன உரிமையாளர்கள் வாங்கி வைத்துள்ள அசல் ஓட்டுனர் உரிமத்தை, மீண்டும் ஓட்டுனர்களிடமே ஒப்படைக்க ஆணையிட வேண்டும்.
இவ்வறு, கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் வாடகை கார் ஓட்டுனர்கள் மனு அளித்துள்ளனர்.