கோவையில் சர்வதேச கல்வி கண்காட்சி

வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக ஒரு நாள் சர்வதேச கல்வி கண்காட்சி வரும் செப்டெம்பர் 2ம் தேதியன்று பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை கோவை, அவினாசி சாலையிலுள்ள கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியை கோவை எஜுகேசன் ஓவர்சீஸ் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.

கோவை எஜுகேசன் ஓவர்சீஸ் அகாடமி கடந்த காலத்தில் இதே போன்ற கல்வி கண்காட்சிகளை நடத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருக்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் சேர்க்கைக்கான ஆலோசனை வழங்கப்படும்.

இந்த நாடுகளின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் பாடங்கள், அதில் சேரும் முறைகள், சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள், விசா முறைகள், அந்த நாடுகளுக்கு செல்ல தேவைப்படும் முன் தகுதி தேர்வுகளான GRE, TOEFL, IELTS, GMAT மற்றும் SAT ஆகியவை குறித்து, மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்படும்.

வெளிநாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று சிறந்த முறையில் பயனடையலாம்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...