கோவையில் சர்வதேச கல்வி கண்காட்சி

வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக ஒரு நாள் சர்வதேச கல்வி கண்காட்சி வரும் செப்டெம்பர் 2ம் தேதியன்று பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை கோவை, அவினாசி சாலையிலுள்ள கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியை கோவை எஜுகேசன் ஓவர்சீஸ் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.

கோவை எஜுகேசன் ஓவர்சீஸ் அகாடமி கடந்த காலத்தில் இதே போன்ற கல்வி கண்காட்சிகளை நடத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருக்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் சேர்க்கைக்கான ஆலோசனை வழங்கப்படும்.

இந்த நாடுகளின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் பாடங்கள், அதில் சேரும் முறைகள், சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள், விசா முறைகள், அந்த நாடுகளுக்கு செல்ல தேவைப்படும் முன் தகுதி தேர்வுகளான GRE, TOEFL, IELTS, GMAT மற்றும் SAT ஆகியவை குறித்து, மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்படும்.

வெளிநாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று சிறந்த முறையில் பயனடையலாம்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...