குடும்ப அட்டைதாரர்கள் தங்களது மின்னனு குடும்ப அட்டையினை நியாய விலைக் கடைகளில் பெற்று கொள்ளலாம்


கோயம்புத்தூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது மின்னனு குடும்ப அட்டையினை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளரை அணுகி (10.09.2017)க்குள் பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களில் அமைந்துள்ள 1,419 நியாய விலைக் கடைகளில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ள 9,79,324 குடும்ப அட்டைகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகள் (Smart Card) அச்சிட்டு வழங்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ஆதார் அட்டை பெறுவதற்கு பயனாளிகளால் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்களில் அடிப்படையில் மின்னனு குடும்ப அட்டை தயாரித்து வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அனைத்து பதிவுகளும் சரியாக இருந்து அச்சிட்டு வரப்பெற்ற 6,87,000 மின்னனு குடும்ப அட்டைகள் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு அந்தந்த நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 5,13,000 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 1,74,000 மின்னனு குடும்ப அட்டைகள் அந்தந்த நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டி நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே, பழைய குடும்ப அட்டைகள் வைத்திருந்து மின்னனு குடும்ப அட்டை பெறாமல் உள்ள பயனாளிகள் (10.09.2017)க்குள் தங்களுக்குரிய மின்னனு குடும்ப அட்டையினை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளரை அணுகி பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...