குடும்ப அட்டைதாரர்கள் தங்களது மின்னனு குடும்ப அட்டையினை நியாய விலைக் கடைகளில் பெற்று கொள்ளலாம்


கோயம்புத்தூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது மின்னனு குடும்ப அட்டையினை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளரை அணுகி (10.09.2017)க்குள் பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களில் அமைந்துள்ள 1,419 நியாய விலைக் கடைகளில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ள 9,79,324 குடும்ப அட்டைகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகள் (Smart Card) அச்சிட்டு வழங்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ஆதார் அட்டை பெறுவதற்கு பயனாளிகளால் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்களில் அடிப்படையில் மின்னனு குடும்ப அட்டை தயாரித்து வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அனைத்து பதிவுகளும் சரியாக இருந்து அச்சிட்டு வரப்பெற்ற 6,87,000 மின்னனு குடும்ப அட்டைகள் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு அந்தந்த நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 5,13,000 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 1,74,000 மின்னனு குடும்ப அட்டைகள் அந்தந்த நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டி நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே, பழைய குடும்ப அட்டைகள் வைத்திருந்து மின்னனு குடும்ப அட்டை பெறாமல் உள்ள பயனாளிகள் (10.09.2017)க்குள் தங்களுக்குரிய மின்னனு குடும்ப அட்டையினை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளரை அணுகி பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...