'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்'- ஈஷாவில் மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு பேரணி

'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' என்பது நமது நாட்டில் ஓடும் ஆறுகளை மீட்டெடுத்து புத்துயிர் அளிப்பதற்கான முயற்சிகளில் ஒன்றாகும். நதிகளை மீட்கும் விழிப்புணர்வை நாடுமுழுவதும் ஏற்படுத்துவதற்காக, ஈஷா நிறுவனர் சத்குரு கோவையிலிருந்து கன்னியாகுமரி வழியாக ஹரித்வார் வரை 16 மாநிலங்களுக்கு, 32 நகரங்களுக்கு தாமே வாகனம் ஓட்டிசெல்ல உள்ளார்.

செப்டம்பர் 3-ம் தேதியன்று தொடங்கும் இந்த பேரணி, அக்டோபர் 2-ம் தேதி புதுதில்லியில் நிறைவடையும். அக்டோபர் 2-ம் தேதி அரசாங்கத்திடம் நதிகளை மீட்கும் கொள்கை பரிந்துரை முன்வைக்கப்படும். இந்த கொள்கை பரிந்துரை, நமது நதிகளின் இரு புறத்திலும் வனப்பகுதிக்கான தொழில்நுட்ப மற்றும் பொருளியல் திட்டத்தை உள்ளடக்கியது.

இந்த பயணத்தின் போது சத்குரு, 16 மாநிலங்களின் முதலமைச்சர்களையும் சந்தித்து நதிகளை மீட்பதற்கான அவரது பரிந்துரைகளை ஒப்படைக்கவுள்ளார். 

இந்த முயற்சிக்கு விளையாட்டு, சினிமா, கார்ப்பரேட் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து துறைகளிலிருந்தும் பலர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு நதிகளை மீட்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, ஈஷா யோகா மையத்தின் தன்னார்வத் தொண்டர்கள் 27 ஆகஸ்ட் (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4:30 மணிமுதல் 5:30 மணிவரை 112 அடி ஆதியோகி சிலையிலிருந்து ஈஷா யோகா மையத்தின் நுழைவு வாயிலான சர்ப்ப வாசல் வரை மனித சங்கிலி அமைத்தனர்.



இதில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் நம் நதிகளின் இன்றைய நிலையை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள், கைவினை பொருட்கள் மற்றும் அட்டைகளை ஏந்தி நின்றார்கள். மேலும் 80009 80009 என்ற எண் வடிவத்தில் நின்றனர்.



Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...