'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்'- ஈஷாவில் மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு பேரணி

'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' என்பது நமது நாட்டில் ஓடும் ஆறுகளை மீட்டெடுத்து புத்துயிர் அளிப்பதற்கான முயற்சிகளில் ஒன்றாகும். நதிகளை மீட்கும் விழிப்புணர்வை நாடுமுழுவதும் ஏற்படுத்துவதற்காக, ஈஷா நிறுவனர் சத்குரு கோவையிலிருந்து கன்னியாகுமரி வழியாக ஹரித்வார் வரை 16 மாநிலங்களுக்கு, 32 நகரங்களுக்கு தாமே வாகனம் ஓட்டிசெல்ல உள்ளார்.

செப்டம்பர் 3-ம் தேதியன்று தொடங்கும் இந்த பேரணி, அக்டோபர் 2-ம் தேதி புதுதில்லியில் நிறைவடையும். அக்டோபர் 2-ம் தேதி அரசாங்கத்திடம் நதிகளை மீட்கும் கொள்கை பரிந்துரை முன்வைக்கப்படும். இந்த கொள்கை பரிந்துரை, நமது நதிகளின் இரு புறத்திலும் வனப்பகுதிக்கான தொழில்நுட்ப மற்றும் பொருளியல் திட்டத்தை உள்ளடக்கியது.

இந்த பயணத்தின் போது சத்குரு, 16 மாநிலங்களின் முதலமைச்சர்களையும் சந்தித்து நதிகளை மீட்பதற்கான அவரது பரிந்துரைகளை ஒப்படைக்கவுள்ளார். 

இந்த முயற்சிக்கு விளையாட்டு, சினிமா, கார்ப்பரேட் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து துறைகளிலிருந்தும் பலர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு நதிகளை மீட்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, ஈஷா யோகா மையத்தின் தன்னார்வத் தொண்டர்கள் 27 ஆகஸ்ட் (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4:30 மணிமுதல் 5:30 மணிவரை 112 அடி ஆதியோகி சிலையிலிருந்து ஈஷா யோகா மையத்தின் நுழைவு வாயிலான சர்ப்ப வாசல் வரை மனித சங்கிலி அமைத்தனர்.



இதில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் நம் நதிகளின் இன்றைய நிலையை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள், கைவினை பொருட்கள் மற்றும் அட்டைகளை ஏந்தி நின்றார்கள். மேலும் 80009 80009 என்ற எண் வடிவத்தில் நின்றனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...