லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி

கோவையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இன்று காலை சுந்தராபுரம் பகுதியில் இருந்து மதுக்கரை நோக்கி கழிவு நீர் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. வண்டியை தியாகராஜன் (38) என்பவர் ஓட்டி வந்தார். எதிரே மணல் லாரி வந்தது. அந்த லாரியை பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் (38) என்பவர் இயக்கினார். இரண்டு லாரிகளிலும் கிளீனர்கள் உடனிருந்தனர்.



அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர்களான தியாகராஜன், சந்திரகுமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலியே பலியாகினர். மேலும் இருவர், படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...