கோவை வழியாக வரும் அக்டோபர் 1ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கம்

பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை சென்னை எக்மோர் - எர்ணாகுளம் மற்றும் எர்ணாகுளம் - சென்னை எக்மோர் வரையும், எர்ணாகுளத்தில் இருந்து யஸ்வந்த்பூர் மற்றும் பனஸ்வாடிக்கும் கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

அதன்படி, சென்னை எக்மோரில் இருந்து எர்ணாகுளத்துக்கு வரும், 26ம் தேதி மற்றும் செப்டம்பர் 2ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எக்மோரில் இருந்து இரவு 11:40 மணிக்கு புறப்படும் ரயில், கோவைக்கு மறுநாள் காலை 6:45 மணிக்கு வந்தடைகிறது. எர்ணாகுளத்திற்கு காலை 10:45 மணிக்கு செல்கிறது. 

அதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து வரும் 22, 29-ம் தேதிகள், செப்டம்பர் 12, 19, 26-ம் ஆகிய தேதிகளில் சென்னை எக்மோர்க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து மாலை 6:30-க்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 8:00 மணிக்கு சென்னை செல்கிறது. இந்த ரயில் கோவைக்கு இரவு 11:45-க்கு வந்தடைகிறது. 

எர்ணாகுளத்தில் இருந்து யஸ்வந்த்பூருக்கு செப்டம்பர் 9, 13, 20, 27ம் ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2:45 மணிக்கு புறப்படும் ரயில், அலுவா, பாலக்காடு, கோவை, திருப்பூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 4:30 மணிக்கு யஸ்வந்த்பூர் சென்றடைகிறது. இந்த ரயில் கோவைக்கு இரவு, 8:25 மணிக்கு வந்தடைகிறது. 

எர்ணாகுளத்தில் இருந்து பனஸ்வாடிக்கு வரும் 27ம் தேதி, செப்டம்பர் 3, 10 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இரவு 8:15 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பத்தூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 8:00 மணிக்கு பனஸ்வாடி சென்றடைகிறது. இந்த ரயில் கோவைக்கு இரவு 12:45 மணிக்கு இந்த ரயில் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...