கோவை வழியாக வரும் அக்டோபர் 1ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கம்

பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை சென்னை எக்மோர் - எர்ணாகுளம் மற்றும் எர்ணாகுளம் - சென்னை எக்மோர் வரையும், எர்ணாகுளத்தில் இருந்து யஸ்வந்த்பூர் மற்றும் பனஸ்வாடிக்கும் கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

அதன்படி, சென்னை எக்மோரில் இருந்து எர்ணாகுளத்துக்கு வரும், 26ம் தேதி மற்றும் செப்டம்பர் 2ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எக்மோரில் இருந்து இரவு 11:40 மணிக்கு புறப்படும் ரயில், கோவைக்கு மறுநாள் காலை 6:45 மணிக்கு வந்தடைகிறது. எர்ணாகுளத்திற்கு காலை 10:45 மணிக்கு செல்கிறது. 

அதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து வரும் 22, 29-ம் தேதிகள், செப்டம்பர் 12, 19, 26-ம் ஆகிய தேதிகளில் சென்னை எக்மோர்க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து மாலை 6:30-க்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 8:00 மணிக்கு சென்னை செல்கிறது. இந்த ரயில் கோவைக்கு இரவு 11:45-க்கு வந்தடைகிறது. 

எர்ணாகுளத்தில் இருந்து யஸ்வந்த்பூருக்கு செப்டம்பர் 9, 13, 20, 27ம் ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2:45 மணிக்கு புறப்படும் ரயில், அலுவா, பாலக்காடு, கோவை, திருப்பூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 4:30 மணிக்கு யஸ்வந்த்பூர் சென்றடைகிறது. இந்த ரயில் கோவைக்கு இரவு, 8:25 மணிக்கு வந்தடைகிறது. 

எர்ணாகுளத்தில் இருந்து பனஸ்வாடிக்கு வரும் 27ம் தேதி, செப்டம்பர் 3, 10 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இரவு 8:15 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பத்தூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 8:00 மணிக்கு பனஸ்வாடி சென்றடைகிறது. இந்த ரயில் கோவைக்கு இரவு 12:45 மணிக்கு இந்த ரயில் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...