மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

Coimbatore:

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியில் பச்சிளம் குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்த கும்பலை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியில் கடந்த சில நாட்களாக பெண்கள் பச்சிளம் குழந்தைகளை தூக்கிக்கொண்டு கடும் வெயில் மற்றும் மழையிலும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த நேதாஜி நண்பர்கள் நற்பணி மன்ற இளைஞர்கள், குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தவர்களை நேரில் மடக்கிப் பிடித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் காக்கும் மையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

மேலும், குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைத்ததாக கூறப்படும் பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டனர், அவர்களது பெற்றோர் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய சிக்னல்களில் பச்சிளம் குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் தகவல் அளித்த போதிலும், சம்பவ இடங்களுக்கு குழந்தைகள் நல அதிகாரிகள் தாமதமாக வருவதாக சில இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, கோவையில் முக்கிய சிக்னல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை எடுக்கும் கும்பல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...