கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுகன்யா-வினை தேர்வு செய்யப்பட்டத்தில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து அவரை பணயில் இருந்து ரத்து செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டத்தின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுகன்யா-வினை தேர்வு செய்யப்பட்டதில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து அந்த நியமனத்தை அரசின் அனைத்து சட்ட விதிகளின்படி நியமிக்க வேண்டும். மேலும் அவர்களின் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி என்பது கோவை மாநகராட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் மற்றும் கோவை மாநகராட்சிவாழ் மக்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் சார்ந்த விஷயம். இதில் நல்ல அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை நியமித்து பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை சிறப்பாக எந்தவித லஞ்சம், ஊழலுக்கு இடம் தராமல் சிறப்பாக மக்களுக்கு பயன்பெற, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஆம் ஆத்மி கட்சியினர் சார்பில் ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டத்தின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுகன்யா-வினை தேர்வு செய்யப்பட்டதில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து அந்த நியமனத்தை அரசின் அனைத்து சட்ட விதிகளின்படி நியமிக்க வேண்டும். மேலும் அவர்களின் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி என்பது கோவை மாநகராட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் மற்றும் கோவை மாநகராட்சிவாழ் மக்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் சார்ந்த விஷயம். இதில் நல்ல அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை நியமித்து பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை சிறப்பாக எந்தவித லஞ்சம், ஊழலுக்கு இடம் தராமல் சிறப்பாக மக்களுக்கு பயன்பெற, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஆம் ஆத்மி கட்சியினர் சார்பில் ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.