ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை நிர்வாக அதிகாரி நியமனத்தை ரத்து செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சியினர் மனு

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுகன்யா-வினை தேர்வு செய்யப்பட்டத்தில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து அவரை பணயில் இருந்து ரத்து செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டத்தின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுகன்யா-வினை தேர்வு செய்யப்பட்டதில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து அந்த நியமனத்தை அரசின் அனைத்து சட்ட விதிகளின்படி நியமிக்க வேண்டும். மேலும் அவர்களின் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி என்பது கோவை மாநகராட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் மற்றும் கோவை மாநகராட்சிவாழ் மக்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் சார்ந்த விஷயம். இதில் நல்ல அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை நியமித்து பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை சிறப்பாக எந்தவித லஞ்சம், ஊழலுக்கு இடம் தராமல் சிறப்பாக மக்களுக்கு பயன்பெற, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஆம் ஆத்மி கட்சியினர் சார்பில் ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...