வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம்


வால்பாறை பகுதியில் 66 தனியார் தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. அவற்றில், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவ்வாறு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 247 ரூபாய் மட்டுமே தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, வால்பறை தேயிலை தோட்டத் தொழிலாளா்களின் வாழ்க்கை மேம்படும் வகையில் கேரளாவிற்கு இணையான சம்பளம் வழங்கிட வேண்டும் என நீண்டகாலமாக அப்பகுதி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக இன்று, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தியும், முறையாக ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வரும் தோட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், கேரள தோட்டத் தொழிலாளா்களுக்கு கிடைக்கும் சம்பளத்தைவிட மிக குறைவான சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டு 05.07.2017 -ம் தேதி தொழிலாளா்களுக்கு விரோதமாக துரோக ஒப்பந்தம் செய்தவா்களைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினா் சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் வி.கஸ்தூரிவாசு முன்னிலை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட வால்பாறை தோட்டத் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...