வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம்


வால்பாறை பகுதியில் 66 தனியார் தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. அவற்றில், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவ்வாறு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 247 ரூபாய் மட்டுமே தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, வால்பறை தேயிலை தோட்டத் தொழிலாளா்களின் வாழ்க்கை மேம்படும் வகையில் கேரளாவிற்கு இணையான சம்பளம் வழங்கிட வேண்டும் என நீண்டகாலமாக அப்பகுதி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக இன்று, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தியும், முறையாக ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வரும் தோட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், கேரள தோட்டத் தொழிலாளா்களுக்கு கிடைக்கும் சம்பளத்தைவிட மிக குறைவான சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டு 05.07.2017 -ம் தேதி தொழிலாளா்களுக்கு விரோதமாக துரோக ஒப்பந்தம் செய்தவா்களைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினா் சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் வி.கஸ்தூரிவாசு முன்னிலை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட வால்பாறை தோட்டத் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர்.

Newsletter

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...