கோவையில் பலே கார் திருடன் கைது : 23 கார்களை பறிமுதல் செய்தது போலீஸ்

கோவை மாநகர் பகுதியில் தொடர்ந்து கார் திருட்டு வழக்கில் ஈடுபட்ட வந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாநகரில் சாலையோரம் நிறுத்தப்படும் கார்கள் திருடுபோவதும், வீடு புகுந்து திருடும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடவள்ளி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் ஒரு மர்ம நபர் கத்தி முனையில் வழிப்பறி செய்ததாக வடவள்ளி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், நேற்று மாலை அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த சிவா என்கிற சிவச்சந்திரன் என்ற நபர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை வடவள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கோவையின் பல்வேறு பகுதிகளில் வீடுபுகுந்து திருடுவதும், சாலையோரம் நிற்கும் கார்களை திருடி போலி ஆவணங்கள் தயாரித்து சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. 

மேலும், இவர் மீது பல்வேறு மோசடி மற்றும் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.



தொடர்ந்து, சிவா-வை போலீசார் விசாரணை செய்ததில், 23 கார்கள் திருடியிருப்பதும், பூட்டிய வீடுகளுள் புகுந்து 21 சவரன் நகைகளை கொள்ளையடித்திருப்பதும் தெரியவந்தது.



இந்த நிலையில் சிவா-விடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கார்களை போலீசார் மீட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட கொள்ளையனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...