கோவையில் பலே கார் திருடன் கைது : 23 கார்களை பறிமுதல் செய்தது போலீஸ்

கோவை மாநகர் பகுதியில் தொடர்ந்து கார் திருட்டு வழக்கில் ஈடுபட்ட வந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாநகரில் சாலையோரம் நிறுத்தப்படும் கார்கள் திருடுபோவதும், வீடு புகுந்து திருடும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடவள்ளி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் ஒரு மர்ம நபர் கத்தி முனையில் வழிப்பறி செய்ததாக வடவள்ளி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், நேற்று மாலை அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த சிவா என்கிற சிவச்சந்திரன் என்ற நபர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை வடவள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கோவையின் பல்வேறு பகுதிகளில் வீடுபுகுந்து திருடுவதும், சாலையோரம் நிற்கும் கார்களை திருடி போலி ஆவணங்கள் தயாரித்து சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. 

மேலும், இவர் மீது பல்வேறு மோசடி மற்றும் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.



தொடர்ந்து, சிவா-வை போலீசார் விசாரணை செய்ததில், 23 கார்கள் திருடியிருப்பதும், பூட்டிய வீடுகளுள் புகுந்து 21 சவரன் நகைகளை கொள்ளையடித்திருப்பதும் தெரியவந்தது.



இந்த நிலையில் சிவா-விடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கார்களை போலீசார் மீட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட கொள்ளையனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...