சிஐஐ கோவை மண்டலம் சார்பில் "கட்டிடம் நுண்ணறிவு தொழில் நுட்பங்கள்" குறித்து கருத்தரங்கு

சிஐஐ கோவை மண்டலத்தின் சார்பில் நடைபெற்ற 17-வது மாநாட்டில் "கட்டிடம் நுண்ணறிவு தொழில் நுட்பங்கள்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், கட்டிடத் துறையில் உற்பத்தி செயல்திறன் மற்றும் தொழில்நுட்பங்கள், நுணுக்கங்கள், உற்பத்தி அமைப்பில் அறிவார்ந்த நிறுவனங்களை உருவாக்குவதன் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பிரதான விருந்தினராக மைன்ட்ரீ லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிருஷ்ணகுமார் நடராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "எதிர்காலம் நுண்ணறிவு நிறுவனத்திற்கு சொந்தமானது. செயற்கை நுண்ணறிவு, கிளவுட் போன்ற சிக்கலான தொழில்நுட்பங்களை நிறுவனங்களே கையாள வேண்டும். அதனால் வளர்ச்சி அடைவது மற்றும் தொழில்நுட்பத்தில் செழிப்பும் ஏற்படும் என்றார். 

இதனைத்தொடர்ந்து பேசிய சிஐஐ கோயம்புத்தூர் மண்டலத்தின் தலைவரான எஸ்.நாராயணன் கூறுகையில், இந்த நிகழ்வானது உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை புரிந்து கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒரு தளமாக விளங்குகிறது என்றார்.

பின், ராபர்ட் போஷ் இன்ஜினியரிங் மற்றும் பிசினஷ் சொல்யூஷன்ஸ் துணைத் தலைவர் ஸ்ரீராம் டிவி உரையாற்றியதைத் தொடர்ந்து, கேஜி இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி பி.ஜெயமுரளி நன்றியுரையாற்றினார்.

மாநாட்டில், மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், அமேசான் இணைய சேவைகள் பிரைவேட் லிமிடெட், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், ராபர்ட் போஷ் பொறியியல் மற்றும் வர்த்தக தீர்வுகள் போன்ற முன்னணி தொழிற்துறைகளிலிருந்து 200-க்கும மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...