சிஐஐ கோவை மண்டலம் சார்பில் "கட்டிடம் நுண்ணறிவு தொழில் நுட்பங்கள்" குறித்து கருத்தரங்கு

சிஐஐ கோவை மண்டலத்தின் சார்பில் நடைபெற்ற 17-வது மாநாட்டில் "கட்டிடம் நுண்ணறிவு தொழில் நுட்பங்கள்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், கட்டிடத் துறையில் உற்பத்தி செயல்திறன் மற்றும் தொழில்நுட்பங்கள், நுணுக்கங்கள், உற்பத்தி அமைப்பில் அறிவார்ந்த நிறுவனங்களை உருவாக்குவதன் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பிரதான விருந்தினராக மைன்ட்ரீ லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிருஷ்ணகுமார் நடராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "எதிர்காலம் நுண்ணறிவு நிறுவனத்திற்கு சொந்தமானது. செயற்கை நுண்ணறிவு, கிளவுட் போன்ற சிக்கலான தொழில்நுட்பங்களை நிறுவனங்களே கையாள வேண்டும். அதனால் வளர்ச்சி அடைவது மற்றும் தொழில்நுட்பத்தில் செழிப்பும் ஏற்படும் என்றார். 

இதனைத்தொடர்ந்து பேசிய சிஐஐ கோயம்புத்தூர் மண்டலத்தின் தலைவரான எஸ்.நாராயணன் கூறுகையில், இந்த நிகழ்வானது உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை புரிந்து கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒரு தளமாக விளங்குகிறது என்றார்.

பின், ராபர்ட் போஷ் இன்ஜினியரிங் மற்றும் பிசினஷ் சொல்யூஷன்ஸ் துணைத் தலைவர் ஸ்ரீராம் டிவி உரையாற்றியதைத் தொடர்ந்து, கேஜி இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி பி.ஜெயமுரளி நன்றியுரையாற்றினார்.

மாநாட்டில், மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், அமேசான் இணைய சேவைகள் பிரைவேட் லிமிடெட், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், ராபர்ட் போஷ் பொறியியல் மற்றும் வர்த்தக தீர்வுகள் போன்ற முன்னணி தொழிற்துறைகளிலிருந்து 200-க்கும மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...