கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் புதிய ஆம்புலன்ஸ் வசதி இன்று துவக்கம்


கோவை, சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் புதிய ஆம்புலன்ஸ் வசதி இன்று துவங்கப்பட்டது. இதனை கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.



இது குறித்து அவர் பேசுகையில்; கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவசர காலத்திற்கு பயன்படும் வகையில் 108 இலவச அவசர சிகிச்சை ஊர்த்தி இன்று தொடங்கப்பட்டுள்ளது. விபத்துகளில் உள்ள நோயாளிகளின் உடலை ட்ரான்ஸ்போர்ட் செய்வதற்கான அனைத்து வசதியும் இந்த புதிய ஆம்புலன்ஸில் பொருத்தப்பட்டுள்ளது. சாலை விபத்திலோ அல்லது மற்ற இடங்களில் ஏற்படும் விபத்திலோ நேரில் சென்று நோயாளிகளை காப்பாற்றுவதற்கான பிரத்தியேக ஸ்டக்ச்சர் வசதி கொண்டுள்ளது. மேலும், இதில் கழுத்தில் ஏற்படும் விபத்துக்கு நெக் பிளாக், காலில் ஏற்படும் காயங்களுக்கு வீல் சேர் வசதிகள் உள்ளது.



மேலும், அவசர தேவைக்கான அனைத்து முதலுதவி மருந்துகளும், ஆக்சிஜன் சப்ளை மற்றும் அனைத்து கருவிகளையும் சார்ஜ் செய்யும் வகையில் டிசி கரண்ட் சப்ளை வசதிகள், ஜெனரேட்டர் வசதி, குளுக்கோ மீட்டர் போன்ற முக்கிய கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.



இதில், ஒரு வாகன ஓட்டுனர் மற்றும் அவசர தொழில்நுட்பவியலாளர் உள்ளனர். இவர்கள் நோயாளிகளின் உயிரை பாதுகாக்க உதவுகின்றனர். எனவே, விபத்து ஏற்பட்டுள்ள சுழ்நிலையில், நோயாளிகளின் உயிரை காப்பாற்ற இந்த புதிய ஆம்புலன்ஸ் வசதியை 108 எண் மூலமாக பொதுமக்கள் அழைக்கலாம். இந்த புதிய ஆம்புலன்ஸ் வசதியை ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி.



இவ்வாறு கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...