கோவை, சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் புதிய ஆம்புலன்ஸ் வசதி இன்று துவங்கப்பட்டது. இதனை கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.

இது குறித்து அவர் பேசுகையில்; கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவசர காலத்திற்கு பயன்படும் வகையில் 108 இலவச அவசர சிகிச்சை ஊர்த்தி இன்று தொடங்கப்பட்டுள்ளது. விபத்துகளில் உள்ள நோயாளிகளின் உடலை ட்ரான்ஸ்போர்ட் செய்வதற்கான அனைத்து வசதியும் இந்த புதிய ஆம்புலன்ஸில் பொருத்தப்பட்டுள்ளது. சாலை விபத்திலோ அல்லது மற்ற இடங்களில் ஏற்படும் விபத்திலோ நேரில் சென்று நோயாளிகளை காப்பாற்றுவதற்கான பிரத்தியேக ஸ்டக்ச்சர் வசதி கொண்டுள்ளது. மேலும், இதில் கழுத்தில் ஏற்படும் விபத்துக்கு நெக் பிளாக், காலில் ஏற்படும் காயங்களுக்கு வீல் சேர் வசதிகள் உள்ளது.

மேலும், அவசர தேவைக்கான அனைத்து முதலுதவி மருந்துகளும், ஆக்சிஜன் சப்ளை மற்றும் அனைத்து கருவிகளையும் சார்ஜ் செய்யும் வகையில் டிசி கரண்ட் சப்ளை வசதிகள், ஜெனரேட்டர் வசதி, குளுக்கோ மீட்டர் போன்ற முக்கிய கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இதில், ஒரு வாகன ஓட்டுனர் மற்றும் அவசர தொழில்நுட்பவியலாளர் உள்ளனர். இவர்கள் நோயாளிகளின் உயிரை பாதுகாக்க உதவுகின்றனர். எனவே, விபத்து ஏற்பட்டுள்ள சுழ்நிலையில், நோயாளிகளின் உயிரை காப்பாற்ற இந்த புதிய ஆம்புலன்ஸ் வசதியை 108 எண் மூலமாக பொதுமக்கள் அழைக்கலாம். இந்த புதிய ஆம்புலன்ஸ் வசதியை ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி.

இவ்வாறு கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.சுவாமிநாதன் தெரிவித்தார்.