பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட்டில் சிஸ்கோ நெட்வொர்க் அகாடமி, நெக்ஸ்மோ மொபைல் மற்றும் ஐஓடி சென்டர் திறப்பு விழா

சிஸ்கோ நெட்வொர்க்கிங் அகாடமி மற்றும் நெக்ஸூ மையம் ஆப் எக்ஸலன்ஸ் ஆய்வகங்களின் திறப்பு விழா இன்று பிஎஸ்ஜி கோவை நீலம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச்-யில் நடைபெற்றது.

பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூஷன்ஸ் கல்லூரி தலைவர் எல்.கோபாலகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர், மற்றும் நெக்ஸ்மோ சொலுயூசன்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிஸ்கோ நெட்வொர்க் அகாடமி திறப்பு விழா சிஸ்கோ பிராந்திய அகாடமி தென் மண்டல துணை மையத்தில் எம்.ஸ்ரீவல்சன் தலைமையிலும், நெக்ஸ்மோ சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் (மொபைல் மற்றும் ஐஓடி)-இன் தொடக்க விழா நெக்ஸ்மோ சொலுயூசன் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ். பாண்டியராஜன் தலைமையில் அந்தந்த ஆய்வகங்களிலும் நடைபெற்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிஸ்கோ நெட்வொர்க்கிங் அகாடமியில் ஒரு கல்வியாளர் உறுப்பினர் பொருப்பேற்று அதன் மூலம் மாணவர்களுக்கான சிசிஎன்ஏ சான்றிதழ் படிப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிசிஎன்ஏ நான்கு தொகுதிகளாக ரூட்டிங் மற்றும் எசென்ஷியல்ஸ் மாற்றியமைத்தல் குறித்து உள்ளடக்கியது. 

நெக்ஸ்மோ நிறுவனத்தின் சிறப்பு மையத்தின் மூலம் மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் ஆகியவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களிடையே நெக்ஸ்மோ பணியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் திட்டங்கள் செய்ய முடியும். இதன்மூலம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அதே நிறுவனத்தில் வேலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...