பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட்டில் சிஸ்கோ நெட்வொர்க் அகாடமி, நெக்ஸ்மோ மொபைல் மற்றும் ஐஓடி சென்டர் திறப்பு விழா

சிஸ்கோ நெட்வொர்க்கிங் அகாடமி மற்றும் நெக்ஸூ மையம் ஆப் எக்ஸலன்ஸ் ஆய்வகங்களின் திறப்பு விழா இன்று பிஎஸ்ஜி கோவை நீலம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச்-யில் நடைபெற்றது.

பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூஷன்ஸ் கல்லூரி தலைவர் எல்.கோபாலகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர், மற்றும் நெக்ஸ்மோ சொலுயூசன்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிஸ்கோ நெட்வொர்க் அகாடமி திறப்பு விழா சிஸ்கோ பிராந்திய அகாடமி தென் மண்டல துணை மையத்தில் எம்.ஸ்ரீவல்சன் தலைமையிலும், நெக்ஸ்மோ சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் (மொபைல் மற்றும் ஐஓடி)-இன் தொடக்க விழா நெக்ஸ்மோ சொலுயூசன் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ். பாண்டியராஜன் தலைமையில் அந்தந்த ஆய்வகங்களிலும் நடைபெற்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிஸ்கோ நெட்வொர்க்கிங் அகாடமியில் ஒரு கல்வியாளர் உறுப்பினர் பொருப்பேற்று அதன் மூலம் மாணவர்களுக்கான சிசிஎன்ஏ சான்றிதழ் படிப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிசிஎன்ஏ நான்கு தொகுதிகளாக ரூட்டிங் மற்றும் எசென்ஷியல்ஸ் மாற்றியமைத்தல் குறித்து உள்ளடக்கியது. 

நெக்ஸ்மோ நிறுவனத்தின் சிறப்பு மையத்தின் மூலம் மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் ஆகியவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களிடையே நெக்ஸ்மோ பணியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் திட்டங்கள் செய்ய முடியும். இதன்மூலம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அதே நிறுவனத்தில் வேலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...