நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிப்பது தேவையற்றது- புதியதமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிப்பது தேவையற்றது எனவும், மாணவர்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிப்பது தேவையற்றது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காது. தமிழக அரசு மாணவர்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல், உடனடியாக தரவரிசை பட்டியலை வெளியிட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராது. நீட் தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்த வேண்டும். 

மேலும் அதிமுக கட்சி பிரச்சனை என்பது உட்கட்சி விவகாரம். அதனை அக்கட்சியினர் பேசி தீர்த்துக் கொள்வார்கள். புதிய தமிழகம் கட்சி கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றாக இருப்பதாலேயே பாஜக-வை ஆதரிக்கிறோம். எங்கள் கொள்கை நாட்டின் நலனுக்கானது.

இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் பேசினார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...