நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிப்பது தேவையற்றது எனவும், மாணவர்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிப்பது தேவையற்றது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காது. தமிழக அரசு மாணவர்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல், உடனடியாக தரவரிசை பட்டியலை வெளியிட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராது. நீட் தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்த வேண்டும்.
மேலும் அதிமுக கட்சி பிரச்சனை என்பது உட்கட்சி விவகாரம். அதனை அக்கட்சியினர் பேசி தீர்த்துக் கொள்வார்கள். புதிய தமிழகம் கட்சி கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றாக இருப்பதாலேயே பாஜக-வை ஆதரிக்கிறோம். எங்கள் கொள்கை நாட்டின் நலனுக்கானது.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் பேசினார்.
கோவை விமான நிலையத்தில் இன்று டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிப்பது தேவையற்றது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காது. தமிழக அரசு மாணவர்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல், உடனடியாக தரவரிசை பட்டியலை வெளியிட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராது. நீட் தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்த வேண்டும்.
மேலும் அதிமுக கட்சி பிரச்சனை என்பது உட்கட்சி விவகாரம். அதனை அக்கட்சியினர் பேசி தீர்த்துக் கொள்வார்கள். புதிய தமிழகம் கட்சி கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றாக இருப்பதாலேயே பாஜக-வை ஆதரிக்கிறோம். எங்கள் கொள்கை நாட்டின் நலனுக்கானது.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் பேசினார்.