நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிப்பது தேவையற்றது- புதியதமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிப்பது தேவையற்றது எனவும், மாணவர்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிப்பது தேவையற்றது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காது. தமிழக அரசு மாணவர்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல், உடனடியாக தரவரிசை பட்டியலை வெளியிட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராது. நீட் தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்த வேண்டும். 

மேலும் அதிமுக கட்சி பிரச்சனை என்பது உட்கட்சி விவகாரம். அதனை அக்கட்சியினர் பேசி தீர்த்துக் கொள்வார்கள். புதிய தமிழகம் கட்சி கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றாக இருப்பதாலேயே பாஜக-வை ஆதரிக்கிறோம். எங்கள் கொள்கை நாட்டின் நலனுக்கானது.

இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் பேசினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...