தமிழக அரசு சார்பில் விரைவில் இலவச "டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்"



தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் மையமாக்கப்படுவதைத் தொடர்ந்து விரைவில் பொது மக்களுக்கு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் இலவசமாக "டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்" வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாதாவது:-

உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட உள்ளதால் பொதுமக்கள் யாரும் தனியார் நிறுவனங்களின் செட்டாப் பாக்ஸை விலை கொடுத்து வாங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக செலுத்தி இணைப்பு துண்டிப்பு செய்வதை தவிர்க்கவும். மேலும், சமீப காலமாக ஒரு சில உள்ளூர் கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் உரிமை பெற்றுக்கொண்டு அரசு கேபிள் இணைப்பை துண்டித்தும், தனியாருக்கு சாதகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தியும், கட்டாயப்படுத்தியும், தனியார் செட்டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன.

அவ்வாறு யாரேனும் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் பெறுவதற்கு ஒவ்வொரு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் அவர்களது செட்டாப் பாக்ஸ் தேவைகளை வலைதளத்தில் www.tactv.in உள்நுழைவு (Login) செய்து CAF படிவத்தை தேர்வு செய்து அதில் சந்தாதாரர்களின் விவரங்கள், அதாவது பெயர், ஆதார் எண், பாலினம், மின் அஞ்சல், கைபேசி எண், பிறந்த தேதி, முகவரி, எஸ்டி செட்டாப் பாக்ஸ், எச்டி செட்டாப் பாக்ஸ் வீட்டு உபயோகத்திற்காகவா அல்லது வணிக பயன்பாட்டிற்காகவா போன்ற தகவல்கள் வரும் 2017 ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...