அன்னூர் வட்டத்தில் சாக்கடை கழிவு நீர் குட்டையை அகற்றக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு

அன்னூர் வட்டம், உப்புத் தோட்டம் பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் குட்டையை அகற்றக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட உப்புத் தோட்டம் ஆனந்த் தியேட்டர் பின்புறம் வார்டு எண் 3, 13 மற்றும் 14 உள்ள பகுதியில் அன்னூர் நகரப்பகுதியிலிருந்து வரும் சாக்கடை கழிவுகள் தேங்கி குட்டையாக நிரம்பியுள்ளது. மேற்படி இடமானது கோவிலுக்கு சொந்தமான சுமார் மூன்றறை ஏக்கர் நிலமும் அதில் உள்ள கிணறும் சாக்கடைக் கழிவுகளால் நிரம்பி குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சுகாதார கேட்டினால் பாதிக்கப்பட்டு டெங்கு, டைபாய்டு, மலேரியா மற்றும் சில மர்மக் காய்ச்சல்களினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அன்னூர் பேரூராட்சி மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் கழிவு நீர் குட்டையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...