அன்னூர் வட்டத்தில் சாக்கடை கழிவு நீர் குட்டையை அகற்றக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு

அன்னூர் வட்டம், உப்புத் தோட்டம் பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் குட்டையை அகற்றக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட உப்புத் தோட்டம் ஆனந்த் தியேட்டர் பின்புறம் வார்டு எண் 3, 13 மற்றும் 14 உள்ள பகுதியில் அன்னூர் நகரப்பகுதியிலிருந்து வரும் சாக்கடை கழிவுகள் தேங்கி குட்டையாக நிரம்பியுள்ளது. மேற்படி இடமானது கோவிலுக்கு சொந்தமான சுமார் மூன்றறை ஏக்கர் நிலமும் அதில் உள்ள கிணறும் சாக்கடைக் கழிவுகளால் நிரம்பி குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சுகாதார கேட்டினால் பாதிக்கப்பட்டு டெங்கு, டைபாய்டு, மலேரியா மற்றும் சில மர்மக் காய்ச்சல்களினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அன்னூர் பேரூராட்சி மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் கழிவு நீர் குட்டையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...