புதுமைப் புகுத்தும் வேளான் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்

தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நான்காவது நாளாக கிணத்துக்கடவு ஊராட்சியில் நடைபெற்று வருகிறது. கோதவாடி குளம் அவ்வூர் மக்களுக்கு நன்னீர் தேக்கியாகப் பயன்பட்டு வந்தது. உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், குளத்தைச் சுற்றி களைப் பயிர்களும், குப்பைகளும் அதிகளவில் காணப்பட்டன. ஊர் மக்களின் நலன் கருதி, தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டமாணவர்கள் குளத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 



மற்றொரு மாணவர் குழு சட்டக்கல்புதூரில் மது மற்றும் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். அப்பேரணியில் தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மது மற்றும் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மதுவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

கல்வி நிலையம் என்பது மாணவர்களுக்கு கற்றல் மீது உள்ள ஆர்வத்தைத் தூண்டும் இடமாக அமைய வேண்டும் என்பதில்  முழுமையான நம்பிக்கைக் கொண்டுள்ளது தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகம். அதன் அடிப்படையில் சொக்கனூரில் உள்ள அரசுப் பள்ளி கட்டிடத்தைச் செம்மைப் படுத்தும் விதமாக வெள்ளைப் பூச்சு அடிக்கப்பட்டது. 

நாளின் இறுதி நிகழ்வாக சொக்கனூர் பகுதியில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பேராசிரியர்களின் வழிக்காட்டுதலுடன் காளான் வளர்ப்பு, காய்கறிகள் அறுவடை தொழில்நுட்பம், மண்புழு உரம் பயன்பாடு குறித்த சிறப்பு விளக்கவுரை விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அளிக்கப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...