தள்ளாடும் தமிழகம்..! மதுவே காரணம்..!


மதுக் கலாச்சாரத்தால் உடல்ரீதியாகவும், உள்ளரீதியாகவும், சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்படும் தாக்கங்களையும் பாதிப்புகளையும் அதிர்ச்சியுடன் ஆராய்ந்து பார்த்தோமானால் மிக முக்கியமான ஒரு பிரச்சனையாக தெளிவுபெறுவது அரசுக்கான வருமானம்.

டாஸ்மாக் வருமானத்தை நம்பித்தான் தமிழக அரசு இருக்கிறது. அந்த வருவாய் நின்று விட்டால், மக்கள் பணிகளை எப்படி நிறைவேற்றுவது என்பதே தமிழக அரசின் கவலை. "நாங்கள் குடிப்பதை நிறுத்திவிட்டால் நீங்கள் சாப்பிடவே முடியாது" என்று குடிமகன்கள் சிலர் குடிக்காத மகன்களை நோக்கி கிண்டல் அடிக்கும் அளவுக்கு அதனுடைய வருமானம் இந்த ஆட்சிக்கு முக்கியமாகிவிட்டது.

தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்று நினைக்கும் கட்சிகளும் அமைப்புகளும் டாஸ்மாக் வருவாய்க்கு மாற்றாக நிறையத் திட்டங்களை பரிந்துரைத்து வருகின்றன. 

ஒரே நாளில் மதுவிலக்கைக் கொண்டுவர இயலாது என்றாலும்கூட சிறிது மாற்றங்களின் மூலம் மதுபோதையில் மூழ்கியுள்ளோரை மீட்டெடுக்க முடியும். ஆனால், இங்கோ மதுபோதையில் தமிழகம் தத்தளித்து வருகிறது.

ஒரு தனி மனிதன் தள்ளாடும்போது, ஒரு குடும்பம் தள்ளாடுகிறது. ஒரு குடும்பம் தள்ளாடும்போது, ஒரு சமூகம் தள்ளாடுகிறது. ஒரு சமூகம் தள்ளாடும்போது, ஒரு நாடே தள்ளாடுகிறது. தமிழகம் அப்படி ஒரு தள்ளாட்டத்திலேயே உயிர்வாழ்ந்து வருகிறது என்பதே இங்கு நிதர்சனமான உண்மை.

மதுவால் சீரழியும் தமிழகம்:-

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆட்டோ ஸ்டேன்ட் அருகில் முழு போதையில் இருந்த ஒருவர் பாலத்தின் சுவர் மீது அமர முயற்சி செய்கையில் தவறி கால்வாயில் விழுந்தார். 



நல்ல வேளை, அந்த கால்வாயில் குப்பை நிறைந்திருந்த காரணத்தில் சிறு காயங்களுடன் அந்த நபர் உயிர் தப்பினார். 



இதில் வேடிக்கை என்னவென்றால், வழக்கத்திற்கு மாறான ஒன்று நிகழும்போது அதை நம்மக்கள் வேடிக்கை பார்க்க என்றும் தவறுவதில்லை. அவ்வாறே கால்வாயில் விழுந்த நபரை வேடிக்கை பார்க்கவும் மக்கள் குவிந்தனர். இருப்பினும் அவரை மீட்க முட்படவில்லை.

பின் சிறிது நேரம் கழித்து துர்நாற்றம் தாங்காமல் மதுபோதை தெழிந்த அந்த நபரே, கால்வாயில் இருந்து மீண்டு வெளியேறினார்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...