தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. படுகாயமடைந்த சந்திரசேகர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கியவர் தலைமறைவாகி உள்ளதால் அலங்கியம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில் தம்பி தனது அண்ணனை அருவாளால் வெட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அண்ணன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கியவர் தலைமறைவாகியுள்ளதால் அலங்கியம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்திரசேகர் (வயது 50). இவர் தற்போது ஆட்சியூர் சாலையில் உள்ள விநாயகபுரம் பகுதியில் தனது தம்பி சேனாதிபதியுடன் குடியிருந்து வருகிறார்.


நேற்று மாலை இருவரும் பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது கடும் சண்டையாக மாறியதில், ஆத்திரமடைந்த தம்பி சேனாதிபதி மறைத்து வைத்திருந்த அருவாளால் தனது அண்ணன் சந்திரசேகரை கழுத்து மற்றும் கை பகுதிகளில் வெட்டியுள்ளார். இதில் சந்திரசேகர் படுகாயமடைந்து ரத்தக்களரியில் சுருண்டு விழுந்தார்.


இச்சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக களத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த சந்திரசேகரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, அவரது நிலை தீவிரமானதால் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இச்சம்பவம் குறித்து அலங்கியம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணனை அருவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான தம்பி சேனாதிபதியை கைது செய்ய போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் இவ்வாறு இரத்தக்களரி சம்பவமாக மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து அலங்கியம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...