டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போதிய ஊழியர் நியமனம், EBC ஸ்டிக்கர் முறைகேடு, மண்டல மேலாளர் நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டனர்.


Coimbatore: கோவை பீளமேடு பகுதியில் உள்ள மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது. காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.



டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் பல மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு நடத்தும் மதுபான கடைகளில் போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும், கடைகளில் கூடுதல் இடவசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், மது பாட்டில்களில் EBC ஸ்டிக்கர் 100 சதவீதம் ஒட்டி அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் முறையை சீர் செய்து அவுட்சோர்சிங் முறையில் அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யும் நடைமுறையை அப்டேட் செய்து மூன்று முறை ஸ்கேன் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று கோவை பீளமேடு பகுதியில் உள்ள மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், அலுவலகத்திற்குள் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும், மண்டல மேலாளர் Govindarasu மிகவும் அதிகாரத் தோணியில் நடந்து கொள்வதாகக் கூறி எதிர்ப்பை பதிவு செய்தனர். மண்டல மேலாளர் Govindaraj அதிகாரத் தொணியில் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள், அவருக்கு எதிராகவும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியதை அடுத்து, காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தொழிற்சங்கத்தினர் தங்களது போராட்டம் வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...