கரடு முரடான கருமத்தம்பட்டி சாலை- பொதுமக்கள் அவதி

கோவை மாவட்டத்தின் முக்கிய கிராமப்புற பகுதியான கருமத்தம்பட்டி சாலையில் சில தனியார் நிறுவனங்களின் கனரக வாகனங்களினால் சாலை பழுதடைந்து தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை நிலவிவருகிறது.



கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சாலையில் தனியார் நிறுவனங்களின் கனரக வாகனங்கள் அதிகப்படியாக இயக்கப்படுவதால் அப்பகுதியில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகின்றன. குண்டும் குழியுமாக உள்ள அந்த சாலைகளில் தற்போது பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

இதனால், அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த சாலையினை கடந்து செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், சில சமயங்களில் அந்த சாலையில் புழுதிகள் ஏற்பட்டு அருகில் உள்ள கடைகள், குடியிருப்புகளில் தேங்குவதும் நிலவிவருகிறது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில் அரசு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினால் அப்பகுதி மக்களே அந்த சாலையில் தேங்கியுள்ள கழிவுகளையும், தனியார் நிறுவனங்களின் கழிவுகளையும் அகற்றி வருகின்றனர். 

இதன் நடவடிக்கை குறித்து தகவல் பெற நகரசபை அதிகாரிகளுக்கு தொடர்புகொண்ட நிலையில், அதிகாரிகள் அழைப்பை துண்டிக்கவே செய்தனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...