கரடு முரடான கருமத்தம்பட்டி சாலை- பொதுமக்கள் அவதி

கோவை மாவட்டத்தின் முக்கிய கிராமப்புற பகுதியான கருமத்தம்பட்டி சாலையில் சில தனியார் நிறுவனங்களின் கனரக வாகனங்களினால் சாலை பழுதடைந்து தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை நிலவிவருகிறது.



கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சாலையில் தனியார் நிறுவனங்களின் கனரக வாகனங்கள் அதிகப்படியாக இயக்கப்படுவதால் அப்பகுதியில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகின்றன. குண்டும் குழியுமாக உள்ள அந்த சாலைகளில் தற்போது பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

இதனால், அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த சாலையினை கடந்து செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், சில சமயங்களில் அந்த சாலையில் புழுதிகள் ஏற்பட்டு அருகில் உள்ள கடைகள், குடியிருப்புகளில் தேங்குவதும் நிலவிவருகிறது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில் அரசு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினால் அப்பகுதி மக்களே அந்த சாலையில் தேங்கியுள்ள கழிவுகளையும், தனியார் நிறுவனங்களின் கழிவுகளையும் அகற்றி வருகின்றனர். 

இதன் நடவடிக்கை குறித்து தகவல் பெற நகரசபை அதிகாரிகளுக்கு தொடர்புகொண்ட நிலையில், அதிகாரிகள் அழைப்பை துண்டிக்கவே செய்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...