கோவை மாவட்டத்தின் முக்கிய கிராமப்புற பகுதியான கருமத்தம்பட்டி சாலையில் சில தனியார் நிறுவனங்களின் கனரக வாகனங்களினால் சாலை பழுதடைந்து தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை நிலவிவருகிறது.

கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சாலையில் தனியார் நிறுவனங்களின் கனரக வாகனங்கள் அதிகப்படியாக இயக்கப்படுவதால் அப்பகுதியில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகின்றன. குண்டும் குழியுமாக உள்ள அந்த சாலைகளில் தற்போது பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.
இதனால், அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த சாலையினை கடந்து செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், சில சமயங்களில் அந்த சாலையில் புழுதிகள் ஏற்பட்டு அருகில் உள்ள கடைகள், குடியிருப்புகளில் தேங்குவதும் நிலவிவருகிறது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில் அரசு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினால் அப்பகுதி மக்களே அந்த சாலையில் தேங்கியுள்ள கழிவுகளையும், தனியார் நிறுவனங்களின் கழிவுகளையும் அகற்றி வருகின்றனர்.
இதன் நடவடிக்கை குறித்து தகவல் பெற நகரசபை அதிகாரிகளுக்கு தொடர்புகொண்ட நிலையில், அதிகாரிகள் அழைப்பை துண்டிக்கவே செய்தனர்.

கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சாலையில் தனியார் நிறுவனங்களின் கனரக வாகனங்கள் அதிகப்படியாக இயக்கப்படுவதால் அப்பகுதியில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகின்றன. குண்டும் குழியுமாக உள்ள அந்த சாலைகளில் தற்போது பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.
இதனால், அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த சாலையினை கடந்து செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், சில சமயங்களில் அந்த சாலையில் புழுதிகள் ஏற்பட்டு அருகில் உள்ள கடைகள், குடியிருப்புகளில் தேங்குவதும் நிலவிவருகிறது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில் அரசு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினால் அப்பகுதி மக்களே அந்த சாலையில் தேங்கியுள்ள கழிவுகளையும், தனியார் நிறுவனங்களின் கழிவுகளையும் அகற்றி வருகின்றனர்.
இதன் நடவடிக்கை குறித்து தகவல் பெற நகரசபை அதிகாரிகளுக்கு தொடர்புகொண்ட நிலையில், அதிகாரிகள் அழைப்பை துண்டிக்கவே செய்தனர்.