பிசியோதெரபி கவுன்சில் அமைக்க மத்திய, மாநில அரசை வலியுறுத்தி தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் உண்ணாவிரதம்

பிசியோதெரபி கவுன்சில் அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் ஒரு நாள் அடையாள கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் வரும் ஞாயிறன்று கோவை சிவானந்தா காலனியில் நடைபெறுகிறது. இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ராஜேஸ் கண்ணா வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் பிசியோதெரபி கல்வி தொடங்கப்பட்டு 64 ஆண்டுகள் கடந்துவிட்டது. இருந்தபோதும் பிசியோதெரபி மருத்துவ கல்வியை நெறிப்படுத்த மத்தியிலோ, மாநிலத்திலோ பிசியோதெரபி கவுன்சில் இதுவரை அமைக்கப்படவில்லை.

டெல்லி, மாகாராஸ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் மாநில அளவிலான பிசியோதெரபி கவுன்சில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2009 ஆண்டே சட்டமன்ற கூட்டத்தொடரில் பிசியோதெரபி கவுன்சில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை தமிழகத்தில் பிசியோதெரபி கவுன்சில் உருவாக்கபடவில்லை.

இதனால் நாளுக்கு நாள் போலி பிசியோதெரபி மருத்துவ படிப்புகள் அதிகரித்து வருகிறது. போலி பிசியோதெரபி மருத்துவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இவர்களால் பொது மக்களின் உடல் நலம் கேள்விக் குறியாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதேப்போல், கவுன்சில் இல்லாததால் முறையாக மருத்துவ பட்டம் பெற்ற பிசியோதெரபி மருத்துவர்கள் அரசு பதிவு பெற்ற மருத்துவர்களாக பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுவதால் பொது மக்களால் போலி பிசியோதெரபி மருத்துவர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி 10,000 பேருக்கு ஒரு பிசியோதெரபி மருத்துவர் என்ற முறையில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், தமிழக மக்கள் தொகைக்கு அரசு சார்பில் 134 பிசியோதெரபி மருத்துவர்கள் மட்டுமே பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிசியோதெரபி மருத்துவம் சென்றடைய முடியாத நிலை உள்ளது. இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் பிசியோதெரபி கவுன்சில் ஒன்று தான் தீர்வாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் வரும் ஞாயிறன்று நடைபெறுகிறது.

இதில் பிசியோதெரபி மருத்துவர்களும், மாணவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...