பிசியோதெரபி கவுன்சில் அமைக்க மத்திய, மாநில அரசை வலியுறுத்தி தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் உண்ணாவிரதம்

பிசியோதெரபி கவுன்சில் அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் ஒரு நாள் அடையாள கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் வரும் ஞாயிறன்று கோவை சிவானந்தா காலனியில் நடைபெறுகிறது. இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ராஜேஸ் கண்ணா வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் பிசியோதெரபி கல்வி தொடங்கப்பட்டு 64 ஆண்டுகள் கடந்துவிட்டது. இருந்தபோதும் பிசியோதெரபி மருத்துவ கல்வியை நெறிப்படுத்த மத்தியிலோ, மாநிலத்திலோ பிசியோதெரபி கவுன்சில் இதுவரை அமைக்கப்படவில்லை.

டெல்லி, மாகாராஸ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் மாநில அளவிலான பிசியோதெரபி கவுன்சில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2009 ஆண்டே சட்டமன்ற கூட்டத்தொடரில் பிசியோதெரபி கவுன்சில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை தமிழகத்தில் பிசியோதெரபி கவுன்சில் உருவாக்கபடவில்லை.

இதனால் நாளுக்கு நாள் போலி பிசியோதெரபி மருத்துவ படிப்புகள் அதிகரித்து வருகிறது. போலி பிசியோதெரபி மருத்துவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இவர்களால் பொது மக்களின் உடல் நலம் கேள்விக் குறியாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதேப்போல், கவுன்சில் இல்லாததால் முறையாக மருத்துவ பட்டம் பெற்ற பிசியோதெரபி மருத்துவர்கள் அரசு பதிவு பெற்ற மருத்துவர்களாக பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுவதால் பொது மக்களால் போலி பிசியோதெரபி மருத்துவர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி 10,000 பேருக்கு ஒரு பிசியோதெரபி மருத்துவர் என்ற முறையில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், தமிழக மக்கள் தொகைக்கு அரசு சார்பில் 134 பிசியோதெரபி மருத்துவர்கள் மட்டுமே பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிசியோதெரபி மருத்துவம் சென்றடைய முடியாத நிலை உள்ளது. இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் பிசியோதெரபி கவுன்சில் ஒன்று தான் தீர்வாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் வரும் ஞாயிறன்று நடைபெறுகிறது.

இதில் பிசியோதெரபி மருத்துவர்களும், மாணவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...