வால்பாறை அடுத்துள்ள சோலையார் டேம் இடதுகரை குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் பூகுந்த ஐந்து யானைகள் கொண்ட கூட்டம், பரமசிவம் என்பவரின் வீட்டை உடைத்து வீட்டு உபயோகப் பொருட்களை சேதப் படுத்தியது. தொடர்ந்து, அருகாமையில் இருந்த செல்வி மற்றும் சந்திரன் ஆகியோரின் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளையும் இந்த யானைகள் சேதப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, அருகில் இருந்த மக்கள் கூச்சலிட்டு யானைகளை அங்கு இருந்து விரட்டினர்.

இதேபோல, வால்பாறைக்கு உட்பட்ட செல்லாலிபாறை என்னும் எஸ்டேட் பகுதியில் தர்மன், காட்டுராஜா என்பவரின் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து யானைகள் சேதப்படுத்தியது. வால்பாறையில் உள்ள பல எஸ்டேட் பகுதிகளில் நள்ளிரவில் யானைகள் முகாமிட்டு இடையூறு செய்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


இதேபோல, வால்பாறைக்கு உட்பட்ட செல்லாலிபாறை என்னும் எஸ்டேட் பகுதியில் தர்மன், காட்டுராஜா என்பவரின் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து யானைகள் சேதப்படுத்தியது. வால்பாறையில் உள்ள பல எஸ்டேட் பகுதிகளில் நள்ளிரவில் யானைகள் முகாமிட்டு இடையூறு செய்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
