தென்னம்பாளையம் அருகே காவலாளிக்கு துப்பாக்கிச் சூடு



கோவை மாவட்டம், அம்மன் குளம் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (60). இவர் அரசூர் பிரிவு தென்னம்பாளையம் பகுதியில் செல்வகுமார் என்றவருக்கு சொந்தமான உணவு விடுதியில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த உணவகத்தில் மது பானம் முறையின்றி விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் விடுதி உரிமையாளர் செல்வகுமார் அங்கிருந்தவர்களை வெளியே அனுப்பும்படி தேவராஜிடம் கூறியுள்ளார். பின்னர் கதவை மூட கூறியவர் மது போதையில் காவலாளி தேவராஜை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் தேவராஜ் மயங்கி விழுந்ததால் பதற்றம் அடைந்த செல்வகுமார் மற்றும் மேலாளர் சக்தி இருவரும் செல்வராஜின் முதுகில் பாய்ந்த குண்டை நீக்கிவிட்டு, பின் அவரது வாயில் மதுவை ஊற்றியதாக காயமடைந்த செல்வராஜ் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, வீடு திரும்பிய தேவராஜ், இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமலேயே இருந்துள்ளார். வலி அதிகமாகவே பின் தனது மனைவியிடம் பணிபுரியும் இடத்தில் நடந்ததை கூறினார். தொடர்ந்து, அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்கு சென்ற நிலையில் சட்டம் சார்ந்த பிரச்சனை என மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க மறுத்துள்ளது. 

தொடர்ந்து உணவு விடுதியின் உரிமையாளர் தனக்கு தெரிந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துதருவதாக கூறியதை அடுத்து செல்வராஜ் தென்னம்பாளையத்தில உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இது சாதாரண துப்பாக்கியால் ஏற்பட்ட காயம், இதை பெரிது படுத்த வேண்டாம் என அலட்சியமாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ், பின் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...