தென்னம்பாளையம் அருகே காவலாளிக்கு துப்பாக்கிச் சூடு



கோவை மாவட்டம், அம்மன் குளம் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (60). இவர் அரசூர் பிரிவு தென்னம்பாளையம் பகுதியில் செல்வகுமார் என்றவருக்கு சொந்தமான உணவு விடுதியில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த உணவகத்தில் மது பானம் முறையின்றி விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் விடுதி உரிமையாளர் செல்வகுமார் அங்கிருந்தவர்களை வெளியே அனுப்பும்படி தேவராஜிடம் கூறியுள்ளார். பின்னர் கதவை மூட கூறியவர் மது போதையில் காவலாளி தேவராஜை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் தேவராஜ் மயங்கி விழுந்ததால் பதற்றம் அடைந்த செல்வகுமார் மற்றும் மேலாளர் சக்தி இருவரும் செல்வராஜின் முதுகில் பாய்ந்த குண்டை நீக்கிவிட்டு, பின் அவரது வாயில் மதுவை ஊற்றியதாக காயமடைந்த செல்வராஜ் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, வீடு திரும்பிய தேவராஜ், இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமலேயே இருந்துள்ளார். வலி அதிகமாகவே பின் தனது மனைவியிடம் பணிபுரியும் இடத்தில் நடந்ததை கூறினார். தொடர்ந்து, அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்கு சென்ற நிலையில் சட்டம் சார்ந்த பிரச்சனை என மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க மறுத்துள்ளது. 

தொடர்ந்து உணவு விடுதியின் உரிமையாளர் தனக்கு தெரிந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துதருவதாக கூறியதை அடுத்து செல்வராஜ் தென்னம்பாளையத்தில உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இது சாதாரண துப்பாக்கியால் ஏற்பட்ட காயம், இதை பெரிது படுத்த வேண்டாம் என அலட்சியமாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ், பின் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...