ஜி.எஸ்.டி. வரியால் தமிழக தியேட்டர்கள் ஸ்ட்ரைக்?

மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி வரிக்கொள்கையால் தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 30 சதவிதத்தை வரியாக தமிழக அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வரிவிதிப்பு கொள்கையால், தியேட்டர் உரிமையாளர்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரிக்கொள்கையின் படி தியேட்டர் உரிமையாளர்கள் கட்டணத்தில் இருந்து 18 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டும். டிக்கெட்டுகளின் விலை 100 ரூபாய்க்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் 28 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டும். இந்நிலையில், தமிழக வரி உட்பட 58 சதவிகித வரியை தியேட்டர் உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக சினிமா டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தியேட்டரில் படம் பார்க்க செல்வோர் சுமார் 170 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி படம் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதனால், இன்று நடந்த தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் வரும் 3ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டதாக கூறடுகிறது. இந்த வேலை நிறுத்த போரட்டத்தால் தமிழகத்தில் பல திரையரங்குகளில் திரைபடம் திரையிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...