கோவையில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது



கோவை பழைய சுங்கம் குளத்து வாய்க்கால் வீதி கருணாநதி நகர் பகுதியில் வசிப்பவர் முன்னா (60). இவரது மனைவி ரமீஷா பேகம் (54). இவர்களுக்கு 3 மகன்கள் மட்டும் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் முன்னா தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு ரமீஷா பேகம் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், முன்னா அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முன்னா-வை கைது செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, முன்னா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

கடந்த 4 வருடமாக எனது மனைவி என்னுடன் உடலுறவு கொள்ள மறுத்து வந்தார். மேலும், எனது உடலை பலகீனமாக்க அவர் எனக்குத் தெரியாமலேயே சில மருந்துகளை கொடுத்து வந்தார். எனவே, அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் என் மனைவி நேற்று இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

இவ்வாறு முன்னா கூறினார்.

தொடர்ந்து, இது குறித்து வழக்கு பதிவு செய்த இராமநாதபுரம் பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...