கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவிலில் 48-வது ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு சனிக்கிழமையன்று (நேற்று) இரவு 7 மணியளவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கப்பட்டது. இந்த வழிபாட்டு நிகர்ச்சில் கோவில் தந்திரி சிவபிரசாத்நம்பூதிரி தலைமை வகித்தார். இந்து சமய இணை ஆணையாளர் ஆ.இளம்பரிதி முன்னிலை வகித்தார்.

இதனைத்தொடர்ந்து, நாளை (ஜூன் 26) 2-ம் நாள் திருவிழாவையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் ஐயப்ப சேவா சங்கத்தின் 62-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

தொடர்ந்து, ஜூலை 1ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் பட்டிமன்றம், யானைகளுடன் ரதம், செண்டை வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

திருவிழா நாட்களில் தினமும் காலையில் யானை வாத்தியத்துடன் சிறப்புப் பூஜைகளும் நடைபெறவுள்ளது.

கோவையில் பிரசிதிபெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலின் இச்சிறப்பு வழிபாட்டினைக் காண கோவை மட்டுமின்றி திருப்பூர், சேலம் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்ட மக்களும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, நாளை (ஜூன் 26) 2-ம் நாள் திருவிழாவையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் ஐயப்ப சேவா சங்கத்தின் 62-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

தொடர்ந்து, ஜூலை 1ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் பட்டிமன்றம், யானைகளுடன் ரதம், செண்டை வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

திருவிழா நாட்களில் தினமும் காலையில் யானை வாத்தியத்துடன் சிறப்புப் பூஜைகளும் நடைபெறவுள்ளது.

கோவையில் பிரசிதிபெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலின் இச்சிறப்பு வழிபாட்டினைக் காண கோவை மட்டுமின்றி திருப்பூர், சேலம் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்ட மக்களும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.