கோவை கங்கா மருத்துவமனையில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்



இந்தியாவில் முதல் முறையாக ஏர் ஆம்புலன்ஸ் சேவை கோவையில் செயல்பட்டு வரும் கங்கா மருத்துவமனையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 

கோவையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையான கங்கா மருத்துவமனை சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை வரும் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. விபத்தின் போது காயமடைபவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு வரவும், இருதய நோயாளிகள், உடல் உறுப்பு தானம் போன்றவற்றிக்கு இந்த சேவை அதிகளவில் உதவியாக இருக்கும். இந்த ஏர் ஆம்புலன்ஸில் 2 விமானிகள் 1 நோயாளி 1 மருத்துவர், 1 நோயாளியின் உறவினர் பயணிக்கலாம்.



மேலும், இதற்காக விமான போக்குவரத்துத் துறை அனுமதியுடன் பிரத்யேகமாக ஹெலிப்பேடு அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் இந்த ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டு உள்ளது.



இரண்டு விமானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்கு 1 மணி நேரத்திற்கு 1.25 லட்சம் வரை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கங்கா மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்று இந்த ஏர் அம்புலன்ஸ் சேவையின் பயண்பாடுகள் குறித்தும், மருத்துவர்கள், விமானிகள் உள்ளிட்டோர் அவசர கால பணிகள் குறித்தும் ஒத்திகை நிகழ்த்தினர்.



இதுகுறித்து, கங்கா மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், 1999 காலகட்டத்தில் நடைபெற்ற கார்கில் போரின் போது பாதிக்கப்பட்ட ஏராளமான போர் வீரர்கள் விமானம் மூலம் டெல்லி, காஷ்மீர், சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டனர். 17 இந்திய விமானங்களை ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாற்றலாம்.

1999 கார்கில் போருக்கு பிறகு இந்திய விமானப் படை ஏர் ஆம்புலன்ஸ் 2007-ல் துவங்கப்பட்டது. அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க இதில் அனைத்து வசதிகளும் உள்ளது. தனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோல்டன் ஹவரில் காப்பாற்றப்பட்டேன். இதனாலேயே இந்த ஏர் ஆம்புலன்ஸ் முக்கியத்துவத்தை நான் அறிந்தேன். இம்மாதிரியான சேவைகளால் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவ சேவை அளிக்க வாய்ப்புகள் உள்ளது" என்றார்.

இந்நிகழ்ச்சியின் போது, டாக்டர். ராஜசேகரன், டாக்டர். சண்முகநாதன், டாக்டர். ராஜசபாபதி, கணக வள்ளி சண்முகநாதன், ஏர் மார்ஷல் அனில் பெகல், ஏர் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா, மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...