தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாத துவக்கத்தில் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பருவமழை தொடங்குவதில் கடந்த சில நாட்களாக தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் பருவமழை பெய்யத் துவங்கியுள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் கோவையில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவை சுற்றுவட்டார பகுதிகளான உதகை, வால்பாறை உள்ளிட்ட மலைப் பகுதியில் தற்போது கடும் மழை பெய்து வருகிறது. மேலும் அதனை சுற்றியுள்ள பொள்ளாச்சி பகுதியிலும் மற்றும் கோவை மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த மாதங்களில் தமிழகம் முழுவதும் வாட்டிய வெயிளின் தாக்கம் குறைந்து மழை பெய்யத் துவங்கியிருப்பதால் உதகை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் வறட்சியின் பிடியில் இருந்து புத்துணர்ச்சி பெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் பருவமழை பெய்யத் துவங்கியுள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் கோவையில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவை சுற்றுவட்டார பகுதிகளான உதகை, வால்பாறை உள்ளிட்ட மலைப் பகுதியில் தற்போது கடும் மழை பெய்து வருகிறது. மேலும் அதனை சுற்றியுள்ள பொள்ளாச்சி பகுதியிலும் மற்றும் கோவை மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த மாதங்களில் தமிழகம் முழுவதும் வாட்டிய வெயிளின் தாக்கம் குறைந்து மழை பெய்யத் துவங்கியிருப்பதால் உதகை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் வறட்சியின் பிடியில் இருந்து புத்துணர்ச்சி பெற்று வருகிறது.