இந்தியாவில் முதல் முறையாக ஏர் ஆம்புலன்ஸ் சேவை கோவை கங்கா மருத்துவமனையில் அறிமுகம்


இந்தியாவில் முதல் முறையாக ஏர் ஆம்புலன்ஸ் சேவை கோவையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் துவங்குகிறது எனவும் ஒரு முறை பயன்பாட்டிற்கு 1.25 லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என கங்கா மருத்துவமனை இயக்குனர் டாக்டர்.ராஜசேகர் தெரிவித்தார்.



கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான கங்கா மருத்துவமனை சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை வரும் 25-ம் தேதி துவங்குகிறது. இது தொடர்பாக அந்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர்.ராஜசேகர் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் மருத்துவத்திற்காக துவங்கப்படும் முதல் ஏர் ஆம்புலன்ஸ் சேவை இது. கங்கா மருத்துவமனைக்கு என இல்லாமல் அனைத்து தனியார் மருத்துவமனைக்கும் பயன்படும் வகையில் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவை இருக்கும். விபத்தின் போது காயமடைபவர்களை சீக்கிரமாக மருத்துவமனைக்கு கொண்டு வரவும், இருதய நோயாளிகள், உடல் உறுப்பு தானம் போன்றவற்றிக்கு இந்த சேவை பயன்படும். இந்த ஏர் ஆம்புலன்ஸில் 2 விமானிகள் 1 நோயாளி 1 மருத்துவர், 1 நோயாளியின் உறவினர் பயணிக்கலாம்.



மேலும், விமான போக்குவரத்து துறை அனுமதியுடன் ஹெலிப்பேடு அமைக்கப்பட்டு இருக்கிறது. நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் இந்த ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்களில் இருந்து இரவு நேரத்திலும் சேவை தொடர அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. 



இரண்டு விமானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்கு 1 மணி நேரத்திற்கு 1.25 லட்சம் வரை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" என டாக்டர்.ராஜசேகரன் தெரிவித்தார்.

ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 440 கீ.மீ தூரம் வரை பயணிக்க முடியும். மலைகள் சூழ்ந்த பகுதியாக இருந்தாலும் இந்த ஹெலிகாப்டர் மூலம் பயணிக்க முடியும். மேகமூட்டத்திலும் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவையினை தொடர முடியும்" என விமானி பட்டாசாரியா தெரிவித்தார். மேலும், இந்த ஆம்புலன்ஸ் சேவை மூலம் கோவையை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பயன்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கங்கா மருத்துவமனை தலைவர் டாக்டர். சண்முகநாதன், டாக்டர். ராஜசபாபதி, டாக்டர். ராஜசேகர், டாக்டர். ராஜா பாஸ்கர் மற்றும் மண்டல திட்ட அதிகாரி காயத்திரி அனத்தகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...