கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஜோதிமணி (35). இவர் நேற்று காலை தனது வீட்டில் உள்ள கிரைண்டரில் மாவு அரைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ஜோதிமணி தூக்கியெறியப்பட்டார்.
தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் ஜோதிமணியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஜோதிமணியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் ஜோதிமணியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஜோதிமணியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்